LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, July 12, 2019

கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கத்தினால் வெற்றிபெற்றிருக்க முடியாது – மஹிந்த அணி!

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவு
காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக அரசாங்கத்தால் வெற்றிப்பெற்றிருக்க முடியாது.

மீண்டும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமாக தோற்றகடிப்போம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 70 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

அவ்வாறாயின் அவர் 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருக்க வேண்டும். கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலின் போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த 65 இலட்சம் வாக்குகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை மிக இலகுவாக தீர்மானிக்க வேண்டும்.

இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரம் 50 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

ஆகவே 50 வீதமான வாக்குகனை பொதுஜன முன்னணியால் பெற்றுக்கொள்ள முடியும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் சுந்திர கட்சியும் இணைந்து போட்டியிடுமாக இருந்தால் நிச்சயமாக தேர்தல் எங்களுக்கு சாதமாகவே அமையும்’ என குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7