LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, July 16, 2019

வவுனியாவில் பெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல்: சகோதரன் உட்பட இருவர் வைத்தியசாலையில்

வவுனியா – ஓமந்தை புதியவேலர்
சின்னக்குளம் பகுதியில் பெண் இராணுவச்சிப்பாய் மீது வீடு புகுந்து வெட்டியதில் பெண் இராணுவச்சிப்பாய் காயமடைந்துள்ளார்.

இதனைத்தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் வசித்து வரும் பெண் இராணுவச்சிப்பாயின் வீட்டிற்குள் புகுந்த ஒருவர் இராணுவத்தில் பணிபுரியவேண்டாம் அல்லது இங்கு இருக்கவேண்டாம் என்று தெரிவித்து அப்பெண்மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதன்போது வெட்டு காயத்திற்குள்ளான பெண் இராணுவச்சிப்பாயை காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சகோதரியும் , சகோதரனும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெட்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7