LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, July 9, 2019

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைய தினமே  இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

அந்தவகையில் 6 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மாத்திரமே எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறும்.

இதன்போது போட்டி இல்லாதபட்சத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்தலை நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்படுவார்கள்.

மேலும் மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேரும் என 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களை விதிப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7