(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஷினாஸ்;;)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறுவனத்தினால் மருதமுனை பிரதேச மக்களுக்கு நீண்ட காலத்தேவையாக இருந்து வந்த ஜனாஸா வாகனம் கையளித்த நிகழ்வு ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹ_சைணுதீன் தலைமையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை(13-07-2019)நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUO1RnMoBvVs0aMO6PJEpa1cU8C9hhiKLRyzIqfI2CN7_MhAXHi4njYMgshVY1ru02EkBmV7TRn9ezq6fLp0FWiqrVJFqkXiTvUNv86GyM91e9sFoE0V0MMtcVHD_dqSeZcxya-WLwvlU/s640/1-PMMA+CADER-13-07-2019.jpg)
இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் பிரதிநிதிகளும்,மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகளும்,ஜனாஸா நலன்புரிச் சங்க பிரதிநிதிகளும்,பள்ளிவாசல்களின் தலைவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)