கிழக்கு பிரான்ஸின் அவெனே-வால்-டி பகுதியில் உள்ள ரயில் கடவையில் ரயில் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி மற்றும் அவரது காரில் இருந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் பிரான்ஸ் நேரம் காலை 9:54 அளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.





