LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, July 8, 2019

நம்பிக்கையில்லா பிரேரணை: அரசாங்கத்திற்கு கூட்டமைப்பும் காங்கிரஸும் ஆதரவளிப்பார்கள்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின்  தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் விவாதத்திற்கு வருகின்றது.

இதனை அடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சி உரிய திட்டங்களை வகுத்துள்ளது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும். மறுபுறம் பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீனும் குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக எவ்வித விசாரணைகளுமின்றி விடுவிக்கப்படுவார். எனவே சம்பந்தன் மற்றும் ரிஷாட் அணுசரனையுடன் நம்பிக்கையில்லா பிரேரனை தோல்வி அடையும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு தேசிய பாதுகாப்பினை விடவுன் அரசாங்கத்தின் பாதுகாப்பே முக்கியமாக உள்ளது” என குற்றம் சாட்டினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7