ஒன்றாரியோவை ஆளும் புறோகிரசிவ் கொன்சவேடிவ் கட்சியினால், நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட சட்டம் குறித்து, சட்டத்தரணிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமானது அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமைந்துள்ளது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாத வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், ஒரு சட்டத்திற்குள் பாரியளவிலான விடயங்களை உள்ளடக்கியதன் மூலம் மாகாண அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் செலவுத் திட்டம் மற்றும் 199 ஏனைய சட்டத் திருத்தங்களுடன் இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





