ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் போட்டியிடுமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மகஜர் கையளிப்பு நிகழ்வில், நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜெயசேகர, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, வீரகுமார திஸாநாயக்க, துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீயானி விஜயவிக்கிரம, மோகன் லால் கிரேரோ மற்றும் சாந்த பண்டார உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தரப்பினருடன் விரிவான முற்போக்குக் கூட்டணியை உருவாக்குதல் குறித்தும் இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முற்போக்குக் கூட்டணிக்கும் மைத்திரிபால சிறிசேனவை தலைமை தாங்குமாறு மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





