
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது என்பது தெளிவாக தெரிந்தக் கொள்ளமுடிகின்றது. தெரிவு குழுவில் சாட்சியமளிப்பவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிடப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
கடந்த நாடாளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியமளித்த முன்னாள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பல விடயங்களை குறிப்பிட்டார்.
மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் முக்கிய சூத்திரதாரியான பயங்கரவாதி சாஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டது என கூறினார்.
ஆகவே பயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் என்ன ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.
