LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 19, 2019

பா.ஜா.க.வினரால் தினமும் மன வேதனையுடன் நாட்களை கடந்து செல்கின்றேன் – குமாரசாமி

கட்சி மாறுவதற்கு 10 கோடி தருவதாகவும்
பா.ஜ.க. தனது கட்சி உறுப்பினருக்கு அழைப்பு விடுத்ததாக கர்நாடகா முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மன வேதனையுடன் நாட்களை கடந்து செல்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – ம.ஜ.த. கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு போன்றவற்றில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

இதனையடுத்து ஒருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மற்றொரு புறம் பா.ஜ.க. என இருதரப்பு நெருக்கடியினை சந்திக்க வேண்டிய சூழலில் குமாரசாமி உள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு குமாரசாமி குமாரசாமி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,” எங்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பா.ஜ.க. 10 கோடி தர உள்ளதாகவும், பா.ஜ.க.விற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறினார். இதுபோன்ற செயல்களில் பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களாகிய உங்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான், மன வேதனையுடன் கடந்து செல்வதை வெளியில் சொல்ல முடியாது.

ஆனால், கர்நாடகா மாநில மக்களின் பிரச்சனைகளை, வலிகளை நிச்சயம் நான் தீர்க்க வேண்டும். அரசினை சுமூகமாக நடத்தும் கடமை எனக்கு இருக்கிறது.” என அவர் கூறினார்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில், ‘நான் முதல்வராகியும் மகிழ்ச்சியாக இல்லை’ என அழுதபடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7