LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, June 20, 2019

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ரணில் இணக்கம்!

கல்முனை பிரதேச செயலகம் விரைவில் வர்த்தமானி
அறிவிப்புடன் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மேலும் இதற்காக அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், மீண்டும் ஒரு அமைச்சரவை பாத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் கணக்கு வழக்குகளுக்கு பிரத்தியேக கணக்கதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் 4ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கமைய வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் நேற்று போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்ததுடன் இன்று அத்துரலிய ரத்ன தேரரும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7