LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 14, 2019

பொசன் போயா தினத்திற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

பொசன் போயா தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்காக 4227 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவ்வகையில், அநுராதபுரம் – மிஹிந்தலை பகுதிகளில் 10 சேவை இடங்கள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த சேவை இடங்களுக்கு பொறுப்பாக உதவி பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 2735 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் 1096 பேரும், சிவில் உடையில் 246 பேரும் பொலிஸ் உயிர்காப்பு சங்க உத்தியோகத்தர்கள் 150 பேரும் உள்ளடங்கலாக 4227 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் தொலைபேசி சேவை, போக்குவரத்து சேவை, மோட்டார் சைக்கிள் பிரிவினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மோப்பநாய் சோதனைகள் என்பனவும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் சிவில் அதிகாரிகளும் ஈடுபடவுள்ளனர்.

வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக போக்குவரத்து அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதற்கமைய வாகனங்களை தரித்து வைப்பதற்காக அநுராதபுரத்தில் 20 இடங்களும், மிஹிந்தலையில் 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் ஆபத்தான இடங்களில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வரலாற்று இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7