, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்ரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடின் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் ஓர் பகுதியாக அவுஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே, உலகலாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தல் வர்த்தகத்தைத் தடுப்பது தொடர்பாக, பிரதமரும் அவுஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் தத்தமது அபிப்பிராயங்களை இதன்போது பரிமாறிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






