புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.அந்தவகையில், வரும் ஜூன் 22ஆம் திகதி இதுகுறித்து விவாதிக்க வருமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து மாநில பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை இந்த அழைப்பை விடுத்துள்ளது.
இதன்போது, புதிய வரைவு கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரைவுக் கொள்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகம் உள்ளிட்ட ஹந்தி பேசாத மாநிலங்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல் புதிய வரைவுக் கொள்கையிலும் திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது





