ள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கை கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், தெல்வகுர பகுதியைச் சேர்ந்த 77 வயதான வயோதிபப் பெண் என்பதோடு, அவர் அந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள திவுலபிட்டிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






