
, எல்லை நிர்ணய சட்டமூலத்திற்கும் அமைவாகவே தீர்வுகாணப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இப்பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாளை உரிய அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நிர்வாகக் கட்டடத் தொகுதியை இன்று (புதன்கிழமை) திறந்துவைத்த பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், பிரதேசமொன்றின் எல்லைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது அப்பிரதேச அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரினதும் அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டும்.
கல்முனை குறித்து 1993ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அது நிதி விதிமுறைகளின் கீழ் இணைத்து செயற்படுத்தப்படவில்லை. எனவே இது குறித்த உரிய அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
