
யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் திணைக்களம் மற்றும் கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. கபே அமைப்பின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.தினேஸ் இதற்கு தலைமை தாங்கினார்.
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயமாலன, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹம்மட் மனாஷ் மகீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இதில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அலுவலர்கள், கபே அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
