
நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிவந்த 1119 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில், வடக்கு மாகாணத்தில் 378 தொண்டர் ஆசிரியர்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்குமான நிரந்தர நியமனங்களை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதமருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உருப்பினர்களான அப்துல்லா மஹரூப், இம்ரான் மஹரூப், மாவைசேனாதிராஜா, துரைரெட்ணசிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
