யிரத்து 113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட குறித்த சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம், மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே கலந்துகொண்டதோடு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டதோடு மாங்கன்றுகளும் வழங்கப்பட்டன.