LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, June 17, 2019

015 ஆம் ஆண்டு மக்கள் செய்த தவறினை இன்று புரிந்து கொண்டுள்ளனர் – ரோஹித அபேகுணவர்தன

தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு இவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்த
மக்கள் தங்கள் செய்த தவறினை இன்று நன்கு புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை

காலம் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் கொள்கைகளையும் அவர் நாடு மீது கொண்டு தனித்துவ பற்றினையும் இன்று எவரும் முன்னெடுத்து செல்லவில்லை.

முறையற்ற விதத்தில் செயற்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆயுட்காலம் முடிவடைந்து வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியே அழிவினை தேடிக் கொண்டது. எவரும் ஏற்படுத்தவில்லை என அஸ்கிரிய பீட மநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் செய்த தவறினை இன்று நன்கு புரிந்துக் கொண்டுள்ளார்கள். மக்கள் மத்தியில் சென்று வாக்கு கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எவ்வித தகைமையும் கிடையாது.” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7