சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில், தமிழகத்தை பொருத்தவரையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.குறித்த பேரணி இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன், இதில் தி.மு.க அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக வந்த அமைச்சர்கள், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.





