மன்னார் வயல் வீதி பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் இன்று (வியாழக்கிழமை) மாலை படையினரால் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தியதுடன் அங்கு சென்றை படைத்தரப்பு அதிகாரி ஒருவர் அநாகரிகமான முறையில் செயற்பட்டடதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாக குறித்த படைத்தரப்பு அதிகாரி அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாய் மொழி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
குறித்த நிறுவனத்திற்குள் புகுந்த 50 க்கும் மேற்பட்ட படையினர் குறித்த நிறுவனம் முழுவதையும் சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.
குறித்த நிறுவனமானது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பாகவும் விவசாயம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் பணியாற்றிவருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட போதும் சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் உரையாடியதாகவும் அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் குறித்த சோதனை தொடர்பாகவும் அநாகரிகமாக செயற்பட்ட அதிகாரி குறித்தும் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் குறித்த நிறுவனம் வாய் மொழி மூலமான முறைப்பாடு பதிவு செய்ததுடன் மனித உரிமை ஆணைக்குழு ஊழியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தகவல் பெற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





