LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 17, 2019

வெனிசுவேலா மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்!

வெனிசுவேலாவில் இடம்பெற்றுவருவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ ஆதரவுப் படைகளினால் வெனிசுவேலாவில் சட்டவிரோத மரணதண்டனை மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த சபை குற்றம் சுமத்தியுள்ளது.

ஒபேக் அங்கத்துவ நாடான வெனிசூலாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான ஜூவன் கைடோ அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவிக்குமாறு தெரிவித்ததுடன், மதுரோவின் அரசாங்கம் இது தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் மீண்டும் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா மற்றும் மேலும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெனிசுவேலாவில் ஜூவன் கைடோவின் தலைமைப் பதவியை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7