
மொன்ட்ரியல் நகரில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் தலைசிறந்த பொறியாளர்கள், ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.
அன்றாட பணிகளில் உதவும் ரோபோக்கள், பளுதூக்கும் ரோபோ, சர்க்கர நாற்காலிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற உதவும் ரோபோ, நான்கு கால்களையுடைய சுமை தூக்கும் ரோபோ ஆகியவை காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
