சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு மிகவும் மோசமடைந்துள்ளதாக கனடாவிற்கான சீன உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.பல தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் முதல் முறையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு சீன – கனேடிய உறவு முடக்க நிலையில் காணப்படுவது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் தலைமை நிதி நிர்வாக அதிகாரி கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.





