
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டவர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு கடுவலை பிரதேசத்தைச் சேர்ந்த சிரிசென தொலவத்த என்பவரால் இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த எப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் மேல்மாகாண சபையின் காலம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இதற்கான தேர்தல் நடத்தப்படாமையால் அந்த மாகாணத்தில் வாழும் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் அவரது மனுவில் கூறியுள்ளார்.
