LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 13, 2019

சாம் பிட்ரோடா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென ராகுல் வலியுறுத்து!

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை விமர்சித்தமைக்கு சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பத்தேகர் சாஹிப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, “1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சீக்கிய கலவரம் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது.  இது குறித்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இதுகுறித்து நான் அவரிடம் தொலைபேசியில் வலியுறுத்தவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெற்ற சீக்கிய படுகொலையில் 3325 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த விடயத்தை மையப்படுத்தி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, இது முடிந்துபோன கதையென குறிப்பிட்டிருந்தார். சாம் பிட்ரோடாவின் இந்த கருத்துக்கு அரசியல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7