LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 6, 2019

யாழ்.பல்கலை மாணவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – சரத் பொன்சேகா

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள்
இல்லை என்றால், அவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பல அரசியல் தலைவர்களும் மாணவர்கள் விடுதலை குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது உடனடியாக பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முடியாது. அவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும்.

நல்லாட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இது கடந்த ஆட்சியில் மறைமுகமாக இடம்பெற்றன. இந்த ஆட்சியில் வெளிப்படையாக இடம்பெறுகின்றன. இதுதான் உண்மை” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7