தொலைந்துபோன கைத்தொலைபேசியைத் தேடிச்சென்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அரிசோனாவில் இடம்பெற்றுள்ளது.கலக்கரியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அதன்பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





