LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 29, 2019

பருத்தித்துறை துறைமுக பகுதிக்கு ஆளுநர் விஜயம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில்
புனரமைப்பு செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு வடக்கு கலாநிதி ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார்.

இன்று (புதன்கிழமை) மாலை விஜயம் மேற்கொண்ட அவர், துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பாடசாலைக்கு விஜயத் செய்த ஆளுநர், அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பருத்தித்துறை ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் ஆகியோருடனும் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை கடற்கரையில் அமைந்துள்ள நடராஜா திறந்தவெளி கலையரங்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஆளுநர் ஈடுபட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7