மன்னார் மறை மாவட்டம் அளவக்கை பங்கின் மாவிலங்கேணி கிராமத்தின் பாது காவலியாம் தூய அடைக்கல அன்னையின் புதிய ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எப்.எல்.இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் அபிசேகம் செய்யப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஆயரின், 71 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் ஆலய மக்களினால் கொண்டாடப்பட்டது.
இதன்போது மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







