ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை இந்நிகழ்வு ஆரம்பமானது.
இதில் யாழ்.ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு சுடரேற்றி தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






