யுத்தத்தின்போது மக்கள் அனுபவித்த கொடுமைகளை காதால் கேட்கும் நாம் இத்துனை துன்பப்படுவோமாக இருந்தால் அந்த துன்பத்தை அனுபவித்த மக்கள் எத்தனை வடுக்களை சுமந்துகொண்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்ப்போம்.
அவ்வாறு யுத்தின்போது தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்து, ஒரு கையையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றிவைத்திருந்தார்.
யுத்தக்களத்தில், தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், இந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்த காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்திருந்தது.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் போது பொதுச்சுடரை ஏற்றிய அந்த சிறுமியை பார்த்த அனைவருக்குமே இந்த நினைவலைகள் தற்போது இடம்பெற்றதைப்போன்று காட்சியளித்தது.
நூற்றுக்கணக்கான பொலிஸார் பலத்த பாதுகாப்பை வழங்கியநிலையில் இன்று முள்ளிவாய்க்கால் மண் எமது உறவுகளின் கண்ணீரில் நனைந்துள்ளது.