பேரினவாத்ததால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் மக்களும் அமைப்புக்களும் இந்த வாரம் முழுவதும் எழுச்சிவாரமாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
உண்ணாவிரதம் மற்றும் இரத்ததானம், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் என பல நிகழ்வுகளில் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பிரதான நிகழ்வாக இன்று பிரித்தானியாவின் Greenpark இல் இருந்து Westminister நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பிரித்தானியா நேரப்படி மாலை 2 மணிக்கு ஆரம்பித்து 6 மணிவரை நடைபெற்றது
இதில் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுக்காக சர்வதேசத்திடம் நீதி வேண்டி பங்கேற்றிருந்தனர்.