LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, May 25, 2019

போதை பொருள் விவகாரம்: 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன்!

போதை பொருள் விவகாரம் தொடர்பாக இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், 17 வயதான சிறுவனொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மனிடொபா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள 15 வயது சிறுவனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) லேங்சைட் வீதிக்கு இடைப்பட்ட சார்ஜெண்ட் மற்றும் எல்லைஸ் அவனியூ பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிற்கு அருகில் இருந்த 17 வயது சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது அருகிலுள்ள 15 வயது சிறுவனொருவருடன் பொலிஸார் பேச முயன்ற போது, அவர் தப்பியோட முயன்றதாகவும், அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார், தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிறுவன் மீது, 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7