LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 19, 2019

எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாட்டில் கடும் மழை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்வதுடன், இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

கடும் மழை பெய்யும் நேரங்களில் இடி, மின்னலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழைப் பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மழைப் பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7