கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 31 மற்றும் 32 வயதான இரண்டு பெண்களே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக உலங்கு வானுார்தி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 31 வயதான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
