எஸ்.என்.சீ லவாலின் விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபர், நீதியமைச்சராக கடமையாற்றிய ஜோடி வில்சன் ராய்போல்டின் தீர்மானத்தை, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, உதாசீனம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அன்ட்றூ ஷீயர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தனது பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை எஸ்.என்.சீ லவாலின் விடயத்தில் தம்மீது பிரதமரின் அலுவலக அதிகாரிகள் உட்படப் பதினொரு பேர் அழுத்தம் பிரயோகித்தார்களெனவும், மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுத்தார்களெனவும், முன்னாள் நீதியமைச்சரும், சட்டமா அதிபருமான ஜோடி வில்சன் றேபோல்ட் நாடாளுமன்ற நீதிக்குழு முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
எனினும், தாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழில்வாண்மையுடனும், கிரமமான முறையிலும் செயற்பட்டுள்ளதாகவும் தவறிழைக்கவில்லை எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முன்னாள் நீதி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
