LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 1, 2019

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்க முன்வர வேண்டும் – யாழில் போராட்டம்!

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா முன்வர வேண்டும் என வலியுறுத்தி யாழில் இன்று ஆலய வழிபாடுகளும் கையெழுத்து போராட்டமும் நடைபெற்றன.

வலிந்தும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினர் வடக்கு, கிழக்கு ரீதியாக மூன்று இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் முப்பதாயிரம் கையெழுத்துக்களை பெற்றுள்ள நிலையில் மேலும் கையெழுத்துக்களைம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த மேற்படி சங்கத்தினர் யாழ் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தந்தை செல்வா சமாதியிலும் வணக்கம் செலுத்தி வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7