ராய்போல்ட் செய்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு மானிடோபவின் நீதியரசர் ஒருவரை பிரதம நீதியரசர் பதவிக்காக நியமிக்குமாறு அப்போதைய நீதியரசர் ராய்போல்ட் பரிந்துரை செய்திருந்தார்.
எனினும் அந்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நீதியரசர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சார்பானவர் என கூறப்படுகின்றது.
இதேவேளை, தமக்கும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடேவிற்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என ராய்போல்ட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
