பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற உயர்நிலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போதே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையில் இயங்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி பல தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இவ்விவகாரம் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தடை விதிப்பதென அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜீவ் கெளபா குறிப்பிட்டுள்ளார்.






