கல்வி அமைச்சு, நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகளுக்கு வாக்கெடுப்பின்றி, திருத்தங்களின்றி நாடாளுமன்றத்தால் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிலையில் கல்வி அமைச்சு, நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.





