LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 13, 2019

பாலியல் துஷ்பிரயோகம்: பாப்பரசரின் முன்னாள் தலைமை ஆலோசகருக்கு சிறை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பாப்பரசர் பிரான்சிசின் முன்னாள் தலைமை ஆலோசகரும், அவுஸ்ரேலிய பேராயருமான ஜோர்ஜ் பெல்-இற்கு ஆறு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய நீதிமன்றத்தினால் இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு மெல்பேர்னில் தேவாலய பாடகர் குழுவை சேர்ந்த இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற உலகின் மிக மூத்த கத்தோலிக்கர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தான் எவ்வித குற்றமும் புரியவில்லை எனத் தெரிவித்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவரும் பேராயர், இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7