நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயத்துறை உள்ளிட்ட வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அத்துடன் 20 வருடங்களை உள்ளடக்கிய நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே விவசாயத்துறையில் நிரந்தர அபிவிருத்திகளைச் செய்ய முடியும்.
அரசாங்கங்கள் மாறுவதன் மூலம் விவசாய வேலைத்திட்டங்கள் மாறாத கொள்கைகளுடன் ஏற்படுத்தப்படவேண்டும். அதேபோன்று விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவேண்டும்” என சமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.






