கடந்த புதன்கிழமையன்று பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தன. போர் விமானத்தில் சென்ற விங் கொமாண்டர் அபிநந்தன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி வான் பரப்பில் அவற்றை இடைமறித்தார்.
அப்போது வானில் இடம்பெற்ற சண்டையில் விமானத்துக்கு சிக்கல் ஏற்படவே, R73 ரக ஏவுகணையை அபிநந்தன் பயன்படுத்தி, பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தினார். அப்போது ‘R73 தேர்வு செய்யப்பட்டு விட்டது’ என்ற தகவலை அபிநந்தன் கடைசியாக விமானத்தில் இருந்து அனுப்பியிருந்தார்.
அதன்பின்னரே, விமானம் பாகிஸ்தான் நாட்டின் எல்லையில் வீழ்ந்துள்ளது. அப்போது பரசூட் மூலம் குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
