
ஈரான் தலைநகர் தெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தமையினாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற பேருந்தில் 50 பயணிகள் பயணித்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
