LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 29, 2019

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பை மறந்து தரம்-5 பரீட்சையை யோசிக்கும் மைத்திரி – நளிந்த

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதை மறந்துவிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம் கொடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தெரிவித்த அவர், “பொது வேட்பாளரை ஏன் மக்கள் ஜனாதிபதியாக்கினர் என அவருக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ நினைவு இருக்கின்றதா?

தாம் ஏன் ஆட்சிக்கு வந்தோம். மக்கள் ஏன் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அவர்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தோம் என்ற அனைத்தையும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல் மாகாணசபைத் தேர்தல் பிற்போகும் என தெரிந்தும் அன்று சபையில் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்தவர்கள் அனைவரும் இன்று தேர்தல் இல்லையென முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7