ஹெய்டி வன்முறையில் சிக்கிக்கொண்ட தாதியர்கள் Montreal திரும்பியுள்ளனர்.ஹெய்டி ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி ஹெய்டியின் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைப் போராட்டம் காரணமாக அதிகளவான கனேடியர்கள் சிக்குண்டுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு சிக்குண்டிருந்த எட்டு தாதியர்கள் Montreal திரும்பியுள்ளனர்.
ஹெய்டி வன்முறையில் சிக்கிக்கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வந்த எட்டு தாதியர்களே இவ்வாறு Montreal திரும்பியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வன்முறையில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான கனேடியர்கள் நேற்றைய தினம் பாதுகாப்பாக நாடு திரும்பியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.





