பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
நண்பர்களுடன் களியாட்ட விடுதி ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து அவசர பொலிஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண் கடத்திச் செல்லப்படும் போது அவர் பயணித்த காரிலிருந்த பணம், தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.





