ரொறன்ரோவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து காரணமாக குறித்த விமான நிலையத்தில் நேற்று மாலை சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
குறித்த விபத்தில் விமானி காயமடைந்த நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக விமான சேவை நிறுவனம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.





